19/9/09

பெரியார் 131வது பிறந்தநாள்


மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

என பெரியார் அறிவுறுத்தியது மாந்தனின் அடிமை வாழ்நிலையை கண்டு சினந்தெழுந்த சிந்தனையாலேயே!


1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஆட்டைகள் கொண்டாடிய போது இல்லை! இது மக்களின் விடுதலை நாள் இல்லைஅடித்தட்டு மக்களின் வாழ்வை அடிமைப்படுத்தி சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்கர்களுக்கான அதிகார மாற்றம் என அறிவித்தவர்.


1930இல் ஒரு மாநாட்டில் பேசும்போது இந்தியா ஒரு தேசமல்ல அது பல தேசங்களை அடக்கி இணைத்து வைத்துக்கொண்டுள்ள ஒரு நாடு என அறிவித்தவர்



1946இல் வெள்ளையர்களால் இந்தியாவுக்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த இடைக்கால அரசாங்கம் 1947க்குப் பின் வெள்ளையர்கள் மற்றும் ஆதிக்க வடவர்களின் நலன்களுக்கான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது. அப்படி எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வெள்ளையர்களால் இடைக்கால அரசாங்கமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950இல் அந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசாக 1950இல் அறிவிக்கப்பட்டது. அதை அன்றைய தேதியிலிருந்து எதிர்த்தும், மறுத்தும் 27 ஆண்டுகாலமாக போராடியவர் பெரியார்.


இவர்களுடைய அரசியலமைப்புச் சட்டத்தால் செல்வர்கள் இறுமாப்பும், ஏழைகள் இழிவும், இந்துக்கள் எனப்படுவோர் அச்சமும், முஸ்லீம்கள் ஐயமும், தாழ்ந்த சாதியினர் நடுக்கமும் மேலும் அடிமைத்தனமுமே நீடிக்கும் என பேசிவந்தார்.


இதற்காகவே இந்தியாவை எதிர்த்தார். தமிழ்நாடு தமிழருக்கேஎன முதல் முழக்கத்தை வைத்தவர் பெரியார்!

அவரது இந்திய எதிர்ப்பை நாமும் முன்னெடுப்போம்!

அனைத்து நிலைகளிலும் சம உரிமை கோரும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தோள்கொடுப்போம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக