1/12/09

ஈரோட்டில் மாவீரர் நாள் நிகழ்வும் – காங்கிரசாரின் அராஜகமும்

கடந்த 27.12.2009 அன்று மாவீரர் நாள் நிகழ்வை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோட்டில் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக ஈரோடு நகரம் முழுக்க 20 தட்டிகளும் (Flex) சுவரொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. இவைகளில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் சுடர் ஏற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்டு ஆத்திரமடைந்த காங்கிரஸ் ரவுடி, குடிகாரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு (எ) வெங்கடாஜலம் போன்றோர் அடியாள் படையுடன் வந்து அனைத்து தட்டிகளையும் அடித்து நொறுக்கி கிழித்து எறிந்தனர். மேலும் தட்டிகள் வைத்திருந்த அமைப்புத் தோழர்களை கொலை மிரட்டல் விடுத்தும் சென்றனர். செய்தியறிந்த ஈரோட்டிலுள்ள அனைத்து அமைப்புத் தோழர்களும் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஈ.வி.கே.எஸ். மீது வழக்குப் பதியச் சொல்லி புகார் அளித்தனர். ஆனால் இதுவரை அப்புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை பல்வேறு அமைப்புத் தோழர்கள் 21 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளது.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக