4/3/13

ஈழத்தோழமை நாள் - கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைக்குழுக் கூட்டம் ஜெனீவாவில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்தமிழர்களின் விடியலை வலியுறுத்தி, புலம்பெயர் நாடுகளிலுள்ள தழிழர்கள் பல்லாயிரக்கணக்கில் 2013 மார்ச் 4 ஆம் நாள், ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நாளில் தாய்த்தமிழகத்திலும் நமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக ஈரோட்டில் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் ஒருங்கிணைந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக